ஒன்றிய அரசு வழக்கம் போல் பாஜக ஆளும் மாநிலமான உத்தரப் பிரதேசத்துக்கு அதிகபட்சமான வரிப்பகிர்வை விடுவித்துள்ளது.
நடப்பு நிதியாண்டில் மாநிலங்களுக்கு 3வது தவணையாக ரூ.1,42,122 லட்சம் கோடி வரிப்பகிர்வை நிதியமைச்சகம் விடுவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்திற்கு ரூ.25,495 கோடி, பீகாருக்கு ரூ.14,295 கோடியும், மத்தியப் பிரதேசத்திற்கு ரூ.11,157 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டுக்கு ரூ.5,797 கோடியும் மட்டுமே விடுவித்துள்ளது.
மற்ற தென்மாநிலங்களான கேரளாவுக்கு ரூ.2,736 கோடியும், கர்நாடகாவுக்கு ரூ.5,183 கோடியும், ஆந்திராவுக்கு ரூ.5,752 கோடியும் விடுவித்துள்ளது.